உ.பியில் 8 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கல்லால் அடித்து கொலை.. தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்!
உத்தர பிரதேச மாநிலம், இட்டாவில் 8 வயது சிறுமி ஒருவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
Recommended Video

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம், இட்டாவில் 8 வயது சிறுமி ஒருவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் தற்போது தொடர்ந்து இது போன்ற பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்புணர்வு கொடுமைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இட்டா என்ற நகரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
போலீஸ் இதில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

திருமண விழா
இட்டாவில் உள்ள குடும்பம் ஒன்றில் திருமண விழாவிற்காக ஊரில் இருந்த மக்கள் எல்லோரும் சென்று இருக்கிறார்கள். அப்போது வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த சோனு என்ற நபர் வன்புணர்வு செய்துள்ளார். சோனு யார் என்ற விவரத்தை போலீஸ் வெளியிடவில்லை. திருமணம் முடிந்து வரும் வரை அவர் இந்த கொடுமையை செய்துள்ளார்.

கொடுமைப்படுத்தினார்
இந்த நிலையில் நடு இரவில் அந்த சிறுமியை அருகில் இருக்கும் புதிய கட்டிடம் ஒன்றிற்கு தூக்கி சென்று, அங்கு அடித்து துன்புறுத்தியுள்ளார். அந்த சிறுமி கத்தி கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் திருமண விழாவிற்காக அதிக சத்தத்தில் பாடல் ஒலிபரப்பியதால் அந்த சிறுமியின் சத்தம் கேட்கவில்லை. அந்த சிறுமியின் தலையில் கல்லால் தாக்கி மோசமாக கொடுமைப்படுத்தியுள்ளார்.

மரணம் அடைந்தார்
இதில் அந்த சிறுமி அந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார். அந்த சிறுமியின் பிரேத பரிசோதனையில், தலையில் 10க்கும் மேற்பட்ட தடவை கல்லால் தாக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தற்போது சோனு என்ற அந்த குற்றவாளி போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கிறான்.

தொடர்கிறது
சில வாரங்களுக்கு முன்பு உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ குல்தீப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதன்பின் காஷ்மீரில் 8 வயது சிறுமி வன்புணர்வு செய்து கொல்லப்பட்டார். அதன்பின் சூரத்தில் இன்னொரு சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இப்போது உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த சம்பவம் நடந்துள்ளது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி











Click it and Unblock the Notifications