ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தார் அமித்ஷா
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி : பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.
பாஜக , திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர்கள் 9 பேரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 18ஆம் தேதியுடன் முடிகிறது. இதனால் அந்தப் பதவிகளுக்கு யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், டெல்லியில் நடந்த பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், அமித் ஷா குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்வதென முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.
தைரியமாக முடிவெடுக்கக்கூடிய அமீத்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி ஏற்பார் என்று டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது அரசியலில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications