மாவோயிஸ்டுகளுக்கு சரியான நேரத்தில் செம்ம பதிலடி தருவோம்: அமித்ஷா எச்சரிக்கை
குவஹாத்தி: சத்தீஸ்கரில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகளுக்கு சரியான நேரத்தில் உரிய பதிலடி தரப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா, பிஜப்பூர் வனப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
இதில் 22 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் பல மாவோயிஸ்டுகள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அஸ்ஸாம் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார் அமித்ஷா.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, சத்தீஸ்கர் மோதலில் இருதரப்பிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்னமும் சரியாக எண்ணிக்கை தெரியவரவில்லை. நமது பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
நமது பாதுகாப்பு படையினர் சிந்திய ரத்தத்துக்கு தக்க பதிலடி தருவோம். இவ்வாறு அமித்ஷா கூறினார்.