For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நொய்டா : அப்பா திட்டியதில் விரக்தி... அமிட்டி பல்கலை விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

நொய்டா அமிட்டி பல்கலைக்கழக விடுதியில் தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

நொய்டா: தெலுங்கானாவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சாய் கிருஷ்ணா. இவர் நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் முதுநிலை டிப்ளமோ படித்து வந்தார்.

விடுதி அறையில் இருந்த மாணவர்கள் அனைவரும் தீபாவளி விடுமுறையை கழிக்க சொந்த ஊர்களுக்கு சென்றதால் சாய் கிருஷ்ணா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

Amity university student found dead in hostel Room in Noida.

இந்நிலையில் சாய் கிருஷ்ணாவிடம் தொலைபேசியில் பேசிய அவரது தந்தை, படிப்பில் கவனம் செலுத்துமாறு திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் படிப்பு செலவுக்காக வாங்கிய கடனை அவர்தான் அடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அப்பாவின் பேச்சால் மனமுடைந்த சாய் கிருஷ்ணா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது பெற்றோருக்கு தெலுங்கில் கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்துள்ளார். அதில் தற்கொலை செய்வது எளிதல்ல என்று குறிப்பிட்டுள்ள சாய் கிருஷ்ணா, நீங்கள் எனக்காக நிறைய செய்துள்ளீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாய்கிருஷ்ணாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

English summary
student commit suicide in hostel room for scolded by father regarding studies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X