For Daily Alerts
Just In
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்.. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
அலிகார்: அலிகார் பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில், நேற்றிரவு இருபிரிவு மாணவர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
அப்போது, மாணவர் ஒருவரின் அறை, தாளாளர் அறை மற்றும் அங்கிருந்த வாகனங்களுக்கு தீயிட்டு மாணவர்கள் வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மாணவர்களின் வன்முறையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக பல்கலைக்கழக வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments
aligarh muslim university students clash police killed injured மாணவர்கள் மோதல் தீவைப்பு போலீஸ் துப்பாக்கிச் சூடு மாணவர் பலி காயம்
English summary
Violence erupted in Aligarh Muslim University (AMU) when two students groups clashed with each other, leaving one dead and several injured early on Sunday.