Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குளித்து முடித்து "டவல்" கேட்ட கணவன்.. பதிலளித்த மனைவி.. வந்ததே ஆத்திரம்.. இந்த கொடுமையை பாருங்க

டவல் கொண்டு வந்து தராத மனைவியை கொலை செய்துவிட்டார் கணவர்

Subscribe to Oneindia Tamil

போபால்: இந்த கொடுமையை பார்த்தீங்களா? குளித்து முடித்த உடனேயே மனைவி டவல் கொண்டு வந்து தரவில்லையாம்.. அதுதான் பிரச்சனையாக வெடித்துள்ளது.. விபரீதமாகவும் முடிந்துள்ளது..!

தம்பதி என்றால் சண்டைகள் வரும் போகும்.. ஒத்து வராவிட்டால் விவாகரத்து செய்துவிடுகிறார்கள்.. அப்படி முடியாதவர்கள் பிள்ளைகளுக்காக சமாளித்து வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.

அப்படியும் முடியாதவர்கள், கணவனையோ அல்லது மனைவியையோ கொலை செய்து விடுகிறார்கள்.. பெரும்பாலும் கள்ளக்காதல் அல்லது வேறு ஏதேனும் முக்கிய காரணங்கள் இந்த கொலைகளுக்கு காரணிகளாக இருக்கலாம்.

ராஜ்குமார்

ராஜ்குமார்

ஆனால், இங்க ஒருத்தர் கடுங்கோபக்காரராக இருப்பார் போல.. மத்திய பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஹிராபூர் என்று ஒரு கிராமம்.. இங்கு வசித்து வருபவர் ராஜ்குமார் பாஹே.. 50 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் புஷ்பா பாய்.. அவருக்கு 46 வயதாகிறது.. இவர்களுக்கு 23 வயதில் ஒரு பெண் இருக்கிறார். ராஜ்குமார் ஒரு தினக்கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று ராஜ்குமார் பாத்ரூமில் குளிக்க சென்றுள்ளார்..

புஷ்பா

புஷ்பா

குளித்துவிட்டு வெளியேவந்தவர், புஷ்பாவிடம் டவல் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.ஆனால் புஷ்பா அப்போது கிச்சனில் பாத்திரங்களை கழுவி கொண்டிருந்தார்.. அதனால் கொஞ்ச நேரத்தில் பாத்திரத்தை கழுவி முடித்துவிட்டு, டவல் எடுத்து வந்து தருகிறேன், அதுவரை காத்திருக்குமாறு சொல்லி உள்ளார்.. பாத்திரம் கழுவிவிட்டு அதற்கு பிறகு டவல் எடுத்து வந்து தரும்வரை காத்திருப்பதா? என்று ராஜ்குமார் டென்ஷன் ஆகிவிட்டார்..

மண்வெட்டி

மண்வெட்டி

அதனால், பாத்ரூமில் இருந்து வெளியே வந்து, புஷ்பாவிடம் சண்டை போட்டுள்ளார். இதுதான் தம்பதிக்குள் தகராறாக வெடித்துள்ளது. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த ராஜ்குமார், வீட்டிற்கு வெளியே கிடந்த மண்வெட்டியை எடுத்துவந்து, புஷ்பாவின் தலையில் ஓங்கி பல முறை அடித்துள்ளார்.. இதை பார்த்து பதறி போன அவரது மகள், அப்பாவை தடுத்துள்ளார்.. ஆனால், மகளையும் தாக்கி மிரட்டியுள்ளார் ராஜ்குமார்..

 பரிதாப பலி

பரிதாப பலி

பிறகு ஆத்திரம் தீராமல் மறுபடியும் மண்வெட்டியால் மனைவியின் மண்டையை உடைத்தார்.. இதில், புஷ்பா பரிதாபமாக சுருண்டு விழுந்து இறந்தார். ரத்தவெள்ளத்தில் புஷ்பா சரிந்து விழுந்ததை பார்த்ததும் ராஜ்குமார் பயந்துவிட்டார்.. அதனால் உடனே அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.. தகவலறிந்து வந்து போலீசார் புஷ்பாவின் சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு, ராஜ்குமாரை தேட ஆரம்பித்தனர்.. அதன்படி மறைவாக இருந்தவரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.. வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+