மே 13-ல் ஆந்திரா தேர்தல்: ஜெகன் ஆட்சி தொடருமா? தங்கை ஷர்மிளா வீழ்த்திவிடுவாரா? மீள்வாரா 'நாயுடு'?
அமராவதி: ஆந்திரா சட்டசபைத் தேர்தல் மே 13-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியைத் தக்க வைப்பாரா? புதைகுழிக்குப் போன காங்கிரஸுக்கு ஜெகனின் தங்கை ஒய்.எஸ். ஷர்மிளா உயிர் கொடுத்துவிடுவாரா? மாஜி முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மீண்டும் அரியணை கிடைக்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பு.
ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள், 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஆந்திராவில் 25 லோக்சபா தொகுதிகளுக்கு மே 13-ல் தேர்தல் நடைபெற உள்ளது. அதே நாளில் ஆந்திரா சட்டசபை பொதுத் தேர்தல் ஒரே கட்டமாக 175 தொகுதிகளிலும் நடைபெறுகிறது.

2014-ம் ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி 117 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது; ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 70, காங்கிரஸ் 21 இடங்களில் வென்றிருந்தது. மஜ்லிஸ் கட்சிக்கு 7 இடங்கள் கிடைத்தன. அப்போது ஒருங்கிணைந்த ஆந்திரா என்பதால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி களத்தில் இருந்தது.
2019-ல் அசால்ட்டாக வென்ற ஜெகன்: 2019-ம் ஆண்டு தேர்தலில் 151 இடங்களில் வென்று முதல் முறையாக ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரானார். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சிக்கு 23 இடங்கள்தான் கிடைத்தது. ஆந்திராவை கோட்டையாக வைத்திருந்த காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
களம் காணும் கட்சிகள்: தற்போதைய 2024-ம் ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தனித்தே களம் காண்கிறார். தெலுங்குதேசம் கட்சி, ஜனசேனா மற்றும் பாஜக இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் கட்சி இடதுசாரிகளுடன் இணைந்து நிற்கிறது.
களத்தில் எத்தனை இடங்களில் போட்டி?: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 175 இடங்களிலும் தெலுங்குதேசம் கட்சி 144 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ஜனசேனா 21, பாஜக 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி 159 இடங்களிலும் சிபிஎம் 8, சிபிஐ 8 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
தேர்தல் கருத்து கணிப்புகள்: ஆந்திரா சட்டசபைத் தேர்தலில் மீண்டும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வென்று ஆட்சியைத் தக்க வைப்பார் என்றே தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன. உதாரணமாக ELECSENSE நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 122 இடங்களில் வெல்லும்; 49.14% வாக்குகளைப் பெறும் என தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தெலுங்குதேசம் கட்சி 44.34% வாக்குகளைப் பெறும்; பாஜகவுக்கு 0.56% வாக்குகளும் காங்கிரஸுக்கு 1.21% வாக்குகளும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி












Click it and Unblock the Notifications