தெலுங்கானா மசோதா.. ஆந்திரா சட்டசபையில் இன்றும் களேபரம்!!
ஹைதராபாத்: தெலுங்கானா மசோதா விவகாரத்தால் ஆந்திர மாநில சட்டசபையில் இன்றும் அமளி நீடித்தது
இன்று காலை சபை கூடியதும் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான மசோதாவிற்கு தெலுங்கானா எம்.எல்.ஏ க்கள் ஆதரவு குரல் எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராயலசீமாந்திரா எம்.எல்.ஏ க்கள் குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் சபையை சபாநாயகர் ஒத்திவைக்க நேரிட்டது. தனித் தெலுங்கானாவிற்கான ஆந்திர மாநில சீரமைப்பு மசோதா மீது விவாதம் நடத்துவது குறித்து சட்டசபை அலுவல் குழு கூடி ஆலோசனை நடத்துகிறது.

அப்போது இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி தெரிய வரும். இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி, எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சபைக்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தனித் தெலுங்கானா மனுவை கிழித்தும், தீயிட்டு எரித்தும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ க்கள் நேற்று போராட்டம் நடத்தியதால் தெலுங்கானா விவகாரத்தில் சிக்கல் நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications