தெலுங்கானா விவகாரம்: 48 மணிநேர பந்த்… போக்குவரத்து பாதிப்பு ஆந்திர முதல்வர் அவசரக்கூட்டம்
திருப்பதி: தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடங்கப்பட்டுள்ள 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஆந்திராவில் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன திருப்பதி செல்லும் தமிழக பக்தர்கள் திருத்தணியில் இருந்து நடந்தே செல்வதாக கூறப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் உருவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து ஓருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி 48 மணிநேர முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூடுதல் ரயில்கள் இயக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பதி செல்லும் பக்தர்கள் திருத்தணியில் இருந்து நடந்தே செல்வதாக கூறப்படுகிறது. வேலூரில் இருந்து ஆந்திராவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு செல்லும் பேருந்துகளின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பக்தர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் கால்நடையாகவே கீழ்திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்து செல்கின்றனர்.

நாளை பிரம்மோற்சவம் தொடங்க உள்ள நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதனிடையே தெலுங்கானவை பிரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி இன்று அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார். ஆந்திர கடலோர மற்றும் சீமாந்திரா பகுதி அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
மத்திய அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இதில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வர் கிரண் குமார் ரெட்டியை நேரில் சந்தித்து, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications