ஆந்திர முதல்வரின் தெலுங்கான “விசிட்” – மாநிலம் பிரிந்தபின் இதுவே “பர்ஸ்ட் டைம்”
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு புதிய தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தெலுங்கானா மாநிலத்திற்குட்பட்ட வாரங்கல் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

முன்னதாக கூட்டதிற்காக போடப் பட்டிருந்த பந்தலை மாடிகா இடஒதுக்கீடு போராட்ட குழுவை சேர்ந்த சிலர் சேதப்படுத்தியதாக கூறப்பட்டது.
ஆந்திர முதல்வரின் சுற்றுப்பயணம் குறி்த்து கருத்து தெரிவித்துள்ள தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி ஆந்திர முதல்வரின் பயணம் குறித்து தங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளது.
அதே நேரத்தில் இரு மாநிலங்களுக்கிடையேயான பொதுவான பிரச்சனைகளான மின் திட்டம் மற்றும் நதிநீர் பங்கீட்டில் நியாயமான முறையி்ல் நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications