பேரனுக்கு அக்ஷரா அபியாசம் செய்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேரனுக்கு திருப்பதி கோவிலில் அக்ஷரா அபியாசம் செய்து வைத்தார்.
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேரனுக்கு திருப்பதி கோவிலில் அக்ஷரா அபியாசம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒவ்வொரு ஆண்டும் தனது மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களை வெளியிடுவார். கடந்த ஆண்டு அவர் சொத்து பட்டியலை வெளியிட்ட போது சந்திரபாபு நாயுடு பேரனான தேவான்ஷ் சொத்து மதிப்பில் தாத்தாவை மிஞ்சி விட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் பேரன்புக்கொண்ட தனது பேரனுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சந்திரபாபு நாயுடு அக்ஷரா அபியாசம் செய்து வைத்தார். ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடுவுக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications