ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் இடையே இழுபறியா? என்ன சொல்கிறது எக்ஸிட் போல்?
சென்னை: ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியை விட கூடுதலாக 2 இடங்களை பெறும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த மாதம் 11ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தொடர்ந்து 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இன்றுடன் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நிறைவடைந்த நிலையில் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதன்படி ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 13 முதல் 14 இடங்களைக் கைப்பற்றும் என நியூஸ் 18 கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இதேபோல் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி 10 முதல் 12 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.