கலிங்கப்பட்டினம் கடற்கரையில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்.. அடித்துச் சென்ற விலங்குகளின் சிலைகள்
Recommended Video
அமராவதி: பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் கலிங்கப்பட்டினம் கடற்கரையில் தண்ணீரின் அளவு அதிகரித்து அங்கிருந்த விலங்குகளின் சிலைகள் அடித்து செல்லப்பட்டன.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தென்னிந்தியாவையும் வடஇந்தியாவையும் பதம் பார்த்து வருகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஆறுகள், அணைகள், ஏரிகள் என வேகமாக நிரம்பி வருகின்றன.
ஒடிஸா, குஜராத், மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம், தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கலிங்கப்பட்டினம்
ஒடிஸாவில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகள் கனமழையால் நிரம்பியதால் அந்த நீர் ஸ்ரீகாகுளத்தில் உள்ள வம்சதாரா மற்றும் நாகவலி ஆறுகளுக்கு வழிந்தோடுகிறது. இதனால் வம்சதாரா ஆற்றிலிருந்து 1 லட்சம் கனஅடி நீரானது ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம் கடற்கரைக்கு நேற்று திறந்து விடப்பட்டது.

ஆர்ப்பரிக்கும் கடல்
இதனால் வங்க கடலோரத்தில் உள்ள கலிங்கப்பட்டினத்துக்கு ஏராளமான வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் கலிங்கப்பட்டினம் கடற்கரையில் வெள்ளநீர் அதிகரிப்பால் தண்ணீர் வேகமாகவும் ஆர்ப்பரித்தும் வெளியே வந்து அங்கிருக்கும் விலங்குகளின் சிலை மீது மோதுகிறது.

வேதனை
இதனால் யானை, ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட மிருகங்களின் சிலைகள் கடற்கரையில் அடித்து செல்லப்படுகின்றன. கடற்கரைக்கு அழகுக் கொடுத்து வந்த இந்த சிலைகள் தண்ணீரில் உடைந்து அடித்துச் செல்லப்படுவதை பார்க்கும் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
|
ஆங்கிலேயர் காலத்தில்
கலிங்கப்பட்டினம் கடற்கரை ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ளது. இது முக்கிய துறைமுகமாக பார்க்கப்படுகிறது. இந்த துறைமுகம் ஆங்கிலேயர் காலத்திலிருந்து இயங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications