நல்லவர்களை பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.. கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே அட்வைஸ்
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிராக போராடி வருகிறார். நன்னடத்தை மிக்கவர்களை உங்கள் அருகாமையில் வைத்து கொள்ளுங்கள் என்று அடிக்கடி நான் அவரிடம் கூறியிருக்கிறேன் என்று அன்னா ஹசாரே தெரிவித்தார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அலுவலகம் அமைந்துள்ள தலைமை செயலகத்தில் உள்ள அவருடைய முதன்மை செயலாளர் ராஜேந்திர குமாரின் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் 2 நாட்கள் முன்பு திடீரென சோதனை நடத்தினர்.

பிரதமர் மோடியின் தூண்டுதலின்பேரில், தன்னுடைய அலுவலகத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மியினர் போராட்டம் நடத்தினர்.
சமூக சேவகரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே இவ்விவகாரம் பற்றி மராட்டிய மாநிலத்திலுள்ள சொந்த ஊரான, ராலேகான் சித்தியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: குற்றச்சாட்டுகளை சந்திப்பதற்கு பதிலாக, ராஜேந்திர குமாரின் நடவடிக்கையை முன்கூட்டியே அரவிந்த் கெஜ்ரிவால் சோதித்து பார்த்திருக்க வேண்டும்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிராக போராடி வருகிறார். நன்னடத்தை மிக்கவர்களை உங்கள் அருகாமையில் வைத்து கொள்ளுங்கள் என்று அடிக்கடி நான் அவரிடம் கூறியிருக்கிறேன் என்றார்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘இந்த சோதனை அரசியல் பழிவாங்கும் செயலா? அல்லது ஊழல் புகாரை வெளிக்கொண்டு வரும் நடவடிக்கையா? என்பதை விசாரணை வெளிப்படுத்தும். பொதுமக்கள் இதனை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications