இஸ்ரோ செயற்கைக் கோள் மைய இயக்குனராக மயில்சாமி அண்ணாத்துரை நியமனம்!
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனராக பிரபல விஞ்ஞானி டாக்டர்.மயில்சாமி அண்ணாத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் எஸ்.கே.சிவக்குமாருக்கு பதிலாக அண்ணாத்துரை பொறுப்பேற்கிறார். 1982 ஆம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்த அண்ணாத்துரை ISAC யில் சாப்ட்வேர் டீம் லீடராக தனது விண்வெளி ஆராய்ச்சி பணி பயணத்தை துவங்கினார்.

1992 முதல் 2005 வரை இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தார். 8 இன்சாட் திட்டங்களுக்கு திட்ட இயக்குனராக பணியாற்றியிருக்கும் இவரது தலைமையில்தான் இந்தியா முதன்முதலாக சந்திரனுக்கு சந்திராயன்-1 செயற்கைக்கோளை அனுப்பி சாதனை படைத்தது.
அதேபோல், செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோள் அனுப்பும் திட்டமான மங்கள்யானும் மாபெரும் சாதனையை நிகழ்த்தி வருகிறது.












Click it and Unblock the Notifications