டெல்லியில் ஓடும் காரில் பெண் பாலியல் பலாத்காரம்: குற்றவாளிக்கு வலைவீச்சு
டெல்லி: டெல்லியில் ஓடும் காரில் 28 வயதான பெண் ஒருவர் மூன்று பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஞாயிறன்று மாலை ஆனந்தவிகார் பேருந்து நிறுத்தம் அருகே பாதிக்கப்பட்ட பெண் அழுது கொண்டிருந்தார். சாலையில் சென்றவர்கள் பெண்ணை காப்பாற்றியதோடு போலீசில் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த காவல்துறையினர் அவரை அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை தொழிற்சாலை ஒன்றில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி காரில் அந்த நபர் அழைத்து சென்றுவிட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார். ஓடும் காரில் அவரால் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அவருடன் இருந்த மூவரும் தன்னை தாக்கியதாக அப்பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். தான் எதிர்ப்பு தெரிவித்தபோது அவர்கள் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.