போர் விமான என்ஜின் வாங்கியதில் ரூ10 ஆயிரம் கோடி லஞ்ச புகார்- சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!
Subscribe to Oneindia Tamil

இந்திய விமானப்படையில் 2007-2011-ம் ஆண்டுகளில், போர் விமானத்துக்கு என்ஜின் வாங்கியதில் ராணுவ அதிகாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு வந்த ஒரு கடிதம் மூலம் இந்த ஊழல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. முதல் கட்டமாக இதுகுறித்து விசாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் உத்தரவிட்டது.
அதில் லஞ்ச புகாருக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. அதன் பின்னர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் அளித்த பரிந்துரையை ஏற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, லஞ்ச புகார் குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
கடந்த 8 ஆண்டு காலத்தில் லஞ்சப் புகார் தொடர்பாக சுமார் 100 வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு ஏ.கே. அந்தோணி ஒப்படைத்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications