சிஏஏ போராட்டம்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் 7 நிர்வாகிகளுக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு நிதி உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் 7 பேர் நாளை ஆஜராக அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் பல நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாப்புலர் பிரண்ட் இந்தியா அமைப்புக்கு ரூ120.5 கோடி நிதி கிடைத்துள்ளது. இப்பணம் முழுவதும் சில நாட்களில் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டும் உள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலுக்கு ரூ77 லட்சம், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய்சிங்குக்கு ரூ4 லட்சம், வழக்கறிஞர் தவேவுக்கு ர்ரூ11 லட்சம், காஷ்மீர் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு ரூ1.65 கோடி, நியூ ஜோதி குழுமத்துக்கு ரூ1.17 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அப்துல் சமதுக்கு ரூ3.10 லட்சமும் பணம் தரப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல், 2017-18-ம் ஆண்டு ஹாதியா வழக்கில் 7 முறை ஆஜரானேன். ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் என்னுடைய கட்டணத் தொகையை அனுப்பி வைத்தேன். அதற்கு அவர்கள் கட்டணம் செலுத்தினர். இதற்கும் சி.ஏ.ஏ.வுக்கும் என்ன தொடர்பு? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு 2017-18 கால கட்டங்களில் கொடுத்த செக் விவரங்களையும் கபில் சிபல் பகிரங்கப்படுத்தியுள்ளார். அத்துடன் இவை அனைத்துமே சி.ஏ.ஏ. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய கால கட்டம் என்பதையும் கபில் சிபல் சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோல் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர் ஜெய்சிங்கும் தாம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவிடம் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்துக்காக எந்த பணத்தையும் பெறவில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் பொதுச்செயலாளர் முகமது அலி ஜின்னா வெளியிட்ட அறிக்கையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களுக்கு தங்கள் அமைப்பு நிதி உதவி செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ளார். அத்துடன் ஹாதியா வழக்கு விசாரணைக்காகவே உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு பணம் தரப்பட்டது. அதற்கும் சி.ஏ.ஏ.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
7 நிர்வாகிகளுக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்
இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் 7 நிர்வாகிகள் நாளை ஆஜராக அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. அப்போது சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களுக்கு நிதி உதவி அளித்தது தொடர்பாக அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும் என தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications