கன்னட ஹீரோ விஜய் படப்பிடிப்பில் சோகம்: ஏரியில் மூழ்கி 2 நடிகர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: பெங்களூரு அருகே துனியா விஜய் நடித்து வரும் மஸ்தி குடி படப்பிடிப்பில் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கும்போது 2 நடிகர்கள் ஏரியில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
துனியா விஜய் நடித்து வரும் கன்னட படம் மஸ்தி குடி. அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பெங்களூரு அருகே உள்ள திப்பகொண்டனஹள்ளி ஏரியில் இன்று படமாக்கப்பட்டது.

அப்போது விஜய் மற்றும் வில்லன்களாக நடித்து வரும் உதய் மற்றும் அனில் ஆகியோர் ஹெலிகாப்டரில் இருந்து ஏரிக்குள் குதிக்கும் காட்சியை படமாக்கினர். மூவரும் ஹெலிகாப்டரில் இருந்து 100 அடி உயரத்தில் இருந்து ஏரியில் குதித்தனர்.

அதில் விஜய் மட்டும் நீந்தி கரைக்கு வந்தார். அனில் மற்றும் உதய் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பம் பிற்பகல் 3 மணிக்கு நடந்தது.













Click it and Unblock the Notifications