ஆந்திராவுக்கு அமராவதி, விசாகப்பட்டினம், கர்நூல் தலைநகரங்கள்- அமைச்சரவை ஒப்புதல்
அமராவதி: ஆந்திரா மாநிலத்துக்கு அமராவதி, விசாகப்பட்டினம் மற்றும் கர்நூல் என 3-ம் தலைநகரங்களாக செயல்பட அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனிமாநிலம் உருவானது. இதனால் தெலுங்கானாவின் தலைநகராக ஐதராபாத் மாறியது.

இதையடுத்து ஆந்திராவுக்கு அமராவதி என தனிதலைநகரை உருவாக்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கினார். இதற்காக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் புதிய முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி அமராவதியை தலைநகராக்கும் திட்டத்தை ஒத்தி வைத்தார். மேலும் அமராவதி, விசாகப்பட்டினம் மற்றும் கர்நூல் ஆகியவை 3 தலைநகரங்களாக செயல்படும் என முடிவெடுக்கப்பட்டது.
இதற்கு தெலுங்குதேசம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஜெகன் மோகன் ரெட்டி அரசின் இம்முடிவுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆந்திரா அமைச்சரவை கூட்டத்தில் 3 தலைநகரங்களை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமராவதி- சட்டசபை, விசாகப்பட்டினம்- நிர்வாகம், கர்நூல்- நீதித்துறை என்கிற அடிப்படையில் தலைநகரங்களாக செயல்படும் என அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் ஆந்திரா சட்டசபையிலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications