Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்திற்கு செம்மரக் கட்டைகளைக் கடத்த முயன்றதாக ஆந்திராவில் 16 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்திலிருந்து தமிழகத்திற்கு செம்மரக் கட்டைகளை கடத்த முயன்றதாக கூறி 16 பேரை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநில அரசும், காவல்துரையும், செம்மரக் கடத்தலுக்கு எதிராக தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளன. தமிழகத் தொழிலாளர்களை குருவி சுடுவது போல சுட்டுக் கொன்ற சம்பவத்திற்குப் பின்னர் இந்த வேட்டை தீவிரமாகியுள்ளது.

AP police crack down on red sandalwood smugglers

இந்த நிலையில், கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு கிட்டங்கியிலிருந்து செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீஸார் கடத்தலில் ஈடுபட்ட 16 பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 65 லட்சம் ரொக்கப் பணம், 122 செம்மரக் கட்டைகள், 2 வாகனங்கள், ஒரு மொபைல் போன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த செம்மரக் கட்டைகளை தமிழகத்திற்கு கடத்திச் செல்ல முயற்சி நடந்ததாக போலீஸார் கூறியுள்ளனர்.

தற்போது செம்மரக் கட்டைகள் வெட்டுவது குறைந்துள்ள போதிலும் ஏற்கனவே வெட்டி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்டைகளை இடம்மாற்றி கடத்தும் செயல் அதிக அளவில் நடந்து வருகிறதாம். அப்படிப்பட்ட கடத்தலில் ஈடுபட்டவர்களைத்தான் தற்போது கடப்பாவில் போலீஸார் கைது செய்துள்ளனராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+