மணிப்பூரில் மாணவிகளிடம் மிருகத்தனமாக நடந்ததால் தர்ம அடி வாங்கிய 'மதுரை' ராணுவ வீரர்!!
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ளது டி.எம். கல்லூரி. இக்கல்லூரி வளாகத்தை ஒட்டி ஹோட்டல் ஒன்று உள்ளது.
அந்த ஹோட்டலில் தங்கி இருந்த நபர் கல்லூரி மாணவிகளை பார்த்தவுடன் தனது உடைகளை களைந்து நிர்வாணமான நின்றிருக்கிறார். அத்துடன் மாணவிகளை பார்த்தபடியே 'சுய இன்பம்' அனுபவிக்க தொடங்கிவிட்டார்.
இதைக் கண்டு எரிச்சல் அடைந்த மாணவிகள், சக கல்லூரி மாணவர்களிடம் கூறியிருக்கிறார். அந்த மாணவர்கள் கூட்டமாக சென்று மாணவிகள் முன்பு சுய இன்பம் அனுபவித்த நபரை சுற்றி வளைத்து வெளு வெளுவென வெளுத்து வாங்கி விட்டனர்.
அந்த நபரிடம் விசாரித்ததில், அவர் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த ராணுவ வீரர் என தெரியவந்தது. அத்துடன் இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டவரின் பெயர் ஆர். நவீன் குமார்.
இந்த நவீன்குமாரின் சொந்த ஊர் மதுரையாம். இதேபோல் கடந்த சில நாட்களுக்கும் முன்பும் மாணவிகளிடம் இந்த நவீன்குமார் அசிங்கமாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மாணவர்களிடம் நவீன்குமார் தர்ம அடி வாங்கிக் கொண்டிருந்த போது இம்பால் போலீசார் வந்து மீட்டு கைது செய்துள்ளனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நவீன்குமாரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.