‛‛ட்விஸ்ட்’’.. கோவில் இருந்த இடத்தில் தான் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளது - தொல்லியல் துறை அறிக்கை
வாரணாசி: ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஞானவாபி மசூதிக்கு முன்பு அந்த இடத்தில் மிகப்பெரிய இந்து கோவில் அமைந்து இருந்ததாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய தொல்லியல் துறை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி என்பது பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியாகும். 2014ம் ஆண்டை தொடர்ந்து 2019ல் வாரணாசி தொகுதியில் தான் பிரதமர் மோடி போட்டியிட்டு எம்பியாகி பிரதமராக தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தான் வாரணாசியில் ஞானவாபி மசூதி தொடர்பான விவாதம் கடந்த ஆண்டு கிளம்பியது. அதாவது ஞானவாபி மசூதி பகுதியில் பழமையான இந்து கோவில் சிங்கார கவுரி உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தான் ஆண்டு முழுவதும் பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இந்திய தொல்லியல் துறையில் மசூதியில் ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவால் மசூதியில் இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டனர். 2023 ஜூலை மாதம் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு முடிவுகள் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட கவரில் இந்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அந்த அறிக்கை விபரம் என்பது வெளியானதால் பிரச்சனை ஏற்படும் என்பதால் அது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது. இதற்கிடையே தான் தற்போது அந்த அறிக்கையின் நகல்கள் வழக்கு தொடர்பாக இந்து மற்றும் இஸ்லாமியர்கள் சார்ந்த வழக்கறிஞர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
அதில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ள இடத்தில் இதற்கு முன்பு பெரிய இந்து கோவில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதாக இந்துக்கள் சார்பில் வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அறிவியல் முறையிலான ஆய்வில் பழங்கால கட்டடத்தில் எச்சங்கள், கலை, சிற்பங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி பார்த்தால் தற்போதைய கட்டடம் (மசூதி) கட்டுவதற்கு முன்பு அங்கு இந்து கோவில் இருந்ததாக கூறலாம்.
மேலும் அங்கு கிடைத்த ஒரு கல்வெட்டு அரபு-பாரசீகத்தில் உள்ளது. அதில் அவுரங்கசீப்பின் காலத்தில் 1667-77ல் மசூதி கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது 17 வது நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் ஏற்கனவே இருந்த கட்டடம் அழிக்கப்பட்டு அதன் ஒரு பகுதி முற்றிலுமாக மாற்றப்பட்டு தற்போதைய கட்டடத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சுவரில் உள்ள கர்ண ரதம், பறவைகள் உள்ளிட்டவற்றின் சிற்பங்கள் உள்ளிட்டவற்றின் கட்டடக்கலை அடிப்படையில் பார்த்தால் அதனை இந்து கோவில் சுவர் என அடையாளம் காணலாம். செல்லார் எஸ்2-ல் மண்ணின் அடியில் புதைக்கப்பட்டு இருந்த இந்து தெய்வங்களின் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு பகுதியில் பாதாள அறைகளில் முந்தைய கோவிலின் தூண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மணிகளால் அலங்கரிக்கப்பட்ட தூண்டு, விளக்குகள் வைப்பதற்கான முக்கிய இடங்கள் உள்ளிட்டவை இருக்கின்றன.
மொத்தம் 34 கல்வெட்டுகளின் பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவநாகரி, கிரந்த, தெலுங்கு மற்றும் கன்னட எழுத்துக்களில் உள்ள கல்வெட்டுகள் அவற்றில் அடங்கும். கல்வெட்டுகளில் ஜனார்த்தனன், ருத்திரன், உமேசுவரன் என மூன்று தெய்வங்களின் பெயர்கள் காணப்படுகிறது. அதோடு மகா-முக்திமண்டபம் போன்ற சொற்கள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications