டிஜிபியா அல்லது சிபிஐ கூடுதல் இயக்குநரா.. இது அர்ச்சனாவின் குழப்பக் கதை!
டெல்லி/சென்னை: அர்ச்சனா ராமசுந்தரம். இந்த நிமிடத்தில் இவரை விட தர்மசங்கடமான ஒரு நபர் உலகில் இருக்க முடியாது என்று கூறலாம். காரணம், இவரை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்த தமிழக அரசு தொடர்ந்து இவரை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக வைத்துள்ளது. அதேசமயம், இவரை கூடுதல் இயக்குநராக நியமித்த சிபிஐயோ, தொடர்ந்து இவர்தான் கூடுதல் இயக்குநராக இருப்பதாக தனது இணையதளத்தில் கூறி வருகிறது.

இப்படி ஒரே நேரத்தில் இரு அமைப்புகளில் பதவியில் இருப்பதாக கூறப்படும் அர்ச்சனா ராமசுந்தரம், உண்மையில் எந்த வேலையில் இருக்கிறார் என்பது பெரும் குழப்பமாக உள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக இருந்து வந்தவர் அர்ச்சனா ராமசுந்தரம். இந்த நிலையில் அவரை சிபிஐ, கூடுதல் இயக்குநராக நியமித்தது. ஆனால் இதில் சேர தமிழக அரசு இசைவு தராமல் இழுத்தடி வந்தது. கிட்டத்தட்ட 3 மாதங்களாக இந்த இழுபறி நீடித்தது. இறுதியில் தமிழக அரசின் இசைவைப் பற்றிக் கவலைப்படாமல் சிபிஐ பணியில் போய்ச் சேர்ந்து விட்டார் அர்ச்சனா.

இதனால் வெகுண்ட தமிழக அரசு சேர்ந்த சில மணி நேரங்களிலேயே அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இது பெரும் சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவை சிபிஐ விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, சிபிஐ பொறுப்பில் அமர்ந்து விட்ட அர்ச்சனா, உடனடியாகவே மத்திய அரசின், சிபிஐயின் ஊழியராகி விடுகிறார். அவரை எப்படி தமிழக அரசு சஸ்பெண்ட் செய்ய முடியும், அது சட்டவிரோதம், செல்லாது என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தற்போது அர்ச்சனாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதில் அவருக்கு சிபிஐ நியமனத்திற்கு எதிராக தீர்ப்பு வந்தால் அவர் மீண்டும் தமிழக அரசுப் பணிக்குத் திரும்ப நேரிடும். அப்படி வந்தால் அவரது சஸ்பெண்சன் உத்தரவுக்கு உயிர் கிடைத்து அவர் அதிமுக ஆட்சி முடியும் வரை அதிலேயே நீடிக்க நேரிடும்.
அதிமுக அரசுக்கு இன்னும் 2 ஆண்டு பதவிக்காலம் உள்ளது. ஆனால் அர்ச்சனாவுக்கோ 3 ஆண்டு பதவிக்காலம் உள்ளது. எனவே அதிமுக ஆட்சி முடிந்த பின்னர், ஒரு வேளை திமுக வோ அல்லது வேறு யாரோ ஆட்சியில் அமர்ந்தால்தான் இந்த சஸ்பெண்ட் உத்தரவு ரத்தாக வாய்ப்புள்ளது. அதுவரை அர்ச்சனா பதவியில் இடம் பெறும் வாய்ப்பில்லை என்கிறார்கள்.
தற்போது சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் அர்ச்சனாதான் தலைவர் பதவியில் இருப்பதாக போட்டுள்ளனர். சிபிஐ இணையதளத்திலோ அவர்தான் கூடுதல் இயக்குநர் என்று போட்டுள்ளனர்.
மொத்தத்தில் அர்ச்சனாவின் கதை மிகப் பெரிய மர்ம நாவல் போல மாறியுள்ளது. அதேசமயம், அர்ச்சனாவின் போக்கையும் தமிழக காவல்துறையினர் விமர்சிக்கின்றனர். அதாவது மிகப் பெரிய முக்கியமான, டிஜிபி பொறுப்பி்ல இருந்தவரான அர்ச்சனா, தனது அலுவலகத்தில் முக்கியக் கோப்புகள் எதையும் பார்க்காமல், சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டார் என்றும் முறைப்படி உள்துறைச் செயலாளருக்குக் கூட அவர் தகவல் தெரிவிக்காமல் சிபிஐ பணியில் சேர்ந்து விட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஆனால் அப்படி முன்கூட்டியே சொல்லியிருந்தால் சிபிஐ பணியில் சேர விடாமல் ஜெயலலிதா அதிரடியாக சஸ்பெண்ட் செய்திருப்பார் என்பதால்தான் அதைத் தடுக்கும் வகையில் அர்ச்சனா சத்தம் போடாமல் போய் சிபிஐயில் சேர்ந்து விட்டதாக சொல்கிறார்கள்.
ஆனால் ஜெயலலிதாவின் குணம் தெரிந்த பலரும், இனிமேல் ஜெயலலிதா முதல்வராக இருக்கும் வரை அர்ச்சனாவால் எந்தப் பணியிலும் சேர முடியாது என்று அடித்துக் கூறுகிறார்கள்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications