உறியடி திருவிழா... மனித பிரமிடில் ஒலிம்பிக் மெடலா வாங்கப் போறீங்க- சுப்ரீம் கோர்ட் 'பொளேர்'
டெல்லி: ஜென்மாஷ்டமி விழாவையொட்டி நடைபெறும் உறியடி நிகழ்வில் மனித பிரமிடின் உயரத்தை அதிகரிக்க அனுமதி கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமா வாங்க முயற்சிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
ஜென்மாஷ்டமியையொட்டி உறியடிக்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இதற்காக அமைக்கப்படும் மனித பிரமிடின் உயரம் 20 அடியை தாண்டக் கூடாது என்றும், அதில் 18 வயதுக்குட்பட்டவர்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்றும் அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஜெய் ஜவான் கிரிடா மண்டல் கோவிந்தா பதக் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில் அது கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிராவில் உறியடிக்க அமைக்கப்படும் மனித பிரமிடின் உயரத்தை அதிகரிக்க அனுமதி அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைக்கு மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளித்துள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அந்த அமைப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது. மனித பிரமிடின் உயரத்தை அதிகரித்து ஒலிம்பிக்கில் என்ன தங்கப் பதக்கமா வாங்க முயற்சிக்கிறீர்கள் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications