உ.பி.யில் பரபரப்பு- துப்பாக்கி முனையில் எருமைகள், பசுக்களை கடத்திய கொள்ளையர்கள்!
உ.பி.யில் ரூ10 லட்சம் மதிப்புள்ள கால்நடைகளை மர்மநபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
உ.பி: லக்னோவில் பண்ணை ஒன்றில் ரூ10 லட்சம் மதிப்புள்ள கால்நடைகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பால் பண்ணை ஒன்றில் ஏராளமான எருமைகள் மற்றும் பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு நேற்று இரவு நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் தொழிலாளர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி 18 எருமைகள் மற்றும் 4 பசுக்களை வேனில் ஏற்றிச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பண்ணை உரிமையாளர் போலிசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் எருமைகளை திருடிச்சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் கால்நடைகள் திருப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...












Click it and Unblock the Notifications