சல்மான் மீதான ஆயுத தடுப்பு வழக்கு.. இறுதி விசாரணை இன்று தொடக்கம்
நடிகர் சல்மான் கான் மீதான ஆயுத தடுப்பு வழக்கின் இறுதி விசாரணை இன்று முதல் தொடங்குகிறது.
ஜோத்புர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அரியவகை மான்களை வேட்டையாடிய போது நடிகர் சல்மான் கான் அனுமதியில்லாத துப்பாக்கியை வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
கடந்த 1998-ம் ஆண்டு 1, 2-ம் தேதிகளில் ஜோத்புர் அருகில் உள்ள கங்கனி கிராம வனப்பகுதியில் அரிய வகை மான்களை நடிகர் சல்மான்கான் வேட்டையாடியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பான வழக்கில் சல்மான் அந்த மாநில உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை உச்ச நீதிமன்றமும் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் மான் வேட்டையாடிய போது அனுமதி இல்லாத துப்பாக்கியை சல்மான் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சாட்சியங்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டுவிட்டனர். எனவே, இந்த வழக்கில் இறுதி விசாரணையை தொடங்குமாறு ஜோத்புர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று தொடங்குகிறது. இறுதி விசாரணை முடிந்த பிறகு நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பது குறித்து முடிவு எடுக்கும் என்று சல்மான் தரப்பு வழக்கறிஞர் சராவாத் தெரிவித்துள்ளார்.
சல்மான்கான் மீதான ஆயுத தடுப்பு வழக்கு இறுதி விசாரணை இன்றுதொடங்கவுள்ள நிலையில் அவரது சகோதரி அல்வீரா சில வழக்கறிஞர்களுடன் ஜோத்புர் வந்தடைந்துள்ளார்.
மேலும், இந்த வழக்கு குறித்து சல்மானின் வழக்கறிஞர் சராவாத்துடன் அவசர ஆலோசனை நடத்தினார். முந்தைய நீதிபதி ராஜ்சத் குமார் மிஸ்ரா இருந்தபோது கடைசியாக இந்த வழக்கில் சாட்சியங்கள் 5 பேரிடம் சல்மானின் வழக்கறிஞர் மறு விசாரணை நடத்தினார்.
மேலும், சல்மான் கான் மீது ஆயுத தடுப்பு வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்தவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications