இலங்கையில் ராணுவத் தளபதி தல்பீர் சிங்.. 4 நாள் நல்லெண்ண பயணமாக!
டெல்லி: ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ளார். நல்லெண்ண பயணம் என இது அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே ஏகப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தல்பீர் சிங்கின் இலங்கை பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த மாதம் புனேயில் மித்ரா சக்தி என்ற பெயரில் இரு நாட்டு ராணுவமும் இணைந்து கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டன என்பது நினைவிருக்கலாம்.

14 நாள் பயிற்சி
14 நாட்கள் நடந்த இந்த பயிற்சியின்போது தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த உத்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கான ஆயத்த பயிற்சியாகவும் இது நடத்தப்பட்டது.

அதிகாரிகளுடன் சந்திப்பு
தனது இலங்கை பயணத்தின்போது அந்த நாட்டு மூத்த ராணுவத் தலைவர்கள், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளை தல்பீர் சிங் சந்திப்பார். இலங்கையில் உள்ள பல்வேறு ராணுவ பயிற்சி நிலையங்கள், ராணுவத் தலைமையகம் ஆகியவற்றுக்கும் தல்பீர் சிங் செல்லவுள்ளார்.

தமிழக எதிர்ப்பையும் மீறி
இலங்கையுடன் பாதுகாப்பு ரீதியாக நெருக்கமான உறவை இந்தியா வைத்துக் கொள்ள தமிழகத்தில் பல கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்க வரும் இலங்கைக்கு அதி நவீன ஆயுதங்களைக் கொடுக்க தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

மேலும் மேலும் நெருக்கம்
ஆனால் ராணுவ ரீதியாக தொடர்ந்து இலங்கையுடன் இணக்கமாகவும், நெருக்கமாகவும், இருந்து வருகிறது இந்திய அரசு. மேலும் மேலும் நெருங்கியும் வருகிறது.

இலங்கையின் கேடு கெட்ட செயல்
ஆனால் இதை மனதில் கொண்டாவது தமிழக மீனவர்களைத் தாக்காமல், கைது செய்யாமல் இருக்கலாம் இலங்கை. ஆனால் அது தனது கேடு கெட்ட செயலை ஒருபோதும் நிறுத்தி் கொள்ளவில்லை. இந்தியாவின் உதவிகளையும் பெற்றுக் கொண்டு இந்திய மீனவர்களை தொடர்ந்து துயரப்படுத்தி வருகிறது. அதை இந்திய அரசும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.

நேற்று கூட 8 பேர் சிறைபிடிப்பு
நேற்று கூட 8 இந்திய மீனவர்களை சிறை பிடித்துச் சென்றது இலங்கை கடற்படை என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில்தான் ராணுவத் தளபதி தல்பீர் சிங் இலங்கைக்கு நான்கு நாள் நல்லெண்ண பயணமாக வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications