இந்திய ராணுவ தினம்- பிரதமர் உட்பட அனைத்து தலைவர்களும் தேசம் காக்கும் வீரர்களுக்கு மரியாதை
டெல்லி: இந்திய ராணுவ தினம் நேற்று கொண்டாடப்பட்டதையடுத்து டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அமர்ஜவான் ஜோதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு, இந்திய ராணுவத்தின் சார்பில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
எதிரிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுவதோடு, இயற்கை சீற்றம், தேசிய பேரிடர், உள்நாட்டு கலவரம் உள்ளிட்ட நிகழ்வுகளின் போது மீட்பு மற்றும் அமைதி பணிகளிலும் ராணுவம் ஈடுபடுகிறது.

சுதந்திரம் பெற்ற பின்பு, 1948 ஜனவரி 15 இல் ராணுவ தளபதி பொறுப்பை ஆங்கிலேயர் ராய் பட்சரிடம் இருந்து இந்தியாவின் கரியப்பா ஏற்றார். இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கும் விதமாகவும், நாட்டுக்காக உயர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் ஜனவரி 15ம் தேதி இந்திய ராணுவ தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்திய ராணுவம் உலகின் 4வது பெரிய ராணுவமாகும். இதன் தலைமையகம் டெல்லி. தற்போதைய ராணுவ தலைமை தளபதியாக இருப்பவர் பிக்ராம் சிங். இந்திய ராணுவத்தில் தரைப்படை, கப்பல்படை, விமானப்படை, கடலோர காவல்படை, துணை ராணுவப்படை ஆகிய பிரிவுகள் உள்ளன.

தற்போது ராணுவத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றுகின்றனர். இந்திய ராணுவம் பாகிஸ்தானுடன் 4 முறையும், சீனாவுடன் ஒருமுறையும் போரில் ஈடுபட்டுள்ளது. ஐ.நா அமைதிப்படையிலும், இந்திய ராணுவம் பங்கேற்றுள்ளது.
இதனையடுத்து போரில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு ராணுவ தளபதி தல்பீர் சிங் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டர் வலைதளத்தில் ராணுவ தினத்தை முன்னிட்டு போரில் உயிரிழந்த வீரர்களுக்கு தனது மரியாதையை தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுவது போன்ற படத்தையும் பதிவிட்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications