காஷ்மீரில் 2 இளைஞர்கள் சுட்டுக் கொலை, 9 ராணுவ வீரர்களே குற்றவாளிகள்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்காமில் 2 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 9 ராணுவ வீரர்கள்தான் குற்றம் செய்தவர்கள் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள நவ்கம் பகுதியில் இருந்து புல்வாமா மாவட்டத்திற்கு ஒரு காரில் தீவிரவாதிகள் செல்வதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இடையில் உள்ள பட்காம் மாவட்டத்தில் ராணுவத்தினர் 3 சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக இளைஞர்கள் சிலர் சென்று கொண்டிருந்த மாருதி கார், ராணுவத்தினர் அமைத்திருந்த 2 சோதனை சாவடிகளில் நிற்காமல் சென்றது. இதையடுத்து சட்டர்காம் பகுதியில் உள்ள 3-வது சோதனைச்சாவடியில் காரை ராணுவத்தினர் மடக்கி பிடிக்க முயன்றனர்.
அப்போது அந்த கார் தடுப்புகளை உடைத்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றது. இதனால் ராணுவ வீரர்கள் அந்த காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், காரில் இருந்த 2 இளைஞர்கள் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகினர். மேலும் 2 காயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ராணுவம் இதுகுறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டது. விசாரணை முடிவடைந்தது அதிகாரிகளிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இரு இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 9 ராணுவ வீரர்களின் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாருதி கார் மீது துப்பாக்கி சூடு நடத்தியபோது ராணுவ வீரர்கள் தவறு செய்துவிட்டனர். ராணுவ வீரர்கள் காரில் தீவிரவாதிகள் பயணம் செய்கின்றனர் என்று தவறுதலாகக் கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications