அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து.. பைலட்டுகளின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
அருணாசல பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இடா நகர்: அருணாசல பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 2 பைலட்டுகள் இருந்த நிலையில், அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. இருவரையும் தேடும் பணி நடைபெற்று வருவதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்திய ராணுவம் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தி வருகிறது. பாதுகாப்பு தொடர்பான ரோந்து பணிகளிலும் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டு வரும் நிலையில், அருணாசல பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

காலை 9.15 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த இந்த ஹெலிகாப்டரில் இரண்டு பைலட்டுகள் இருந்துள்ளனர். இதனால் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த பைலைட்டுகளின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. இருவரையும் தேடும் பணி நடைபெற்று வருவதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. அருணாசல பிரதேசம் மிகவும் மலைப்பாங்கான பகுதி என்பதால் சாலை மார்க்கமாக செல்ல அதிக நேரம் ஆகும் என்பதால் அருணாசல பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
எல்லைப் பகுதி மாநிலமான அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திராங் பகுதியில் இருந்து தவாங் செல்லும் பகுதியில் தான் பொம்திலா என்ற இடம் உள்ளது. மலைப்பகுதிகளை கொண்ட இந்த இடத்தில்தான் விபத்து நடைபெற்றதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. விபத்துக்கான காரணம் மற்றும் விமானிகளின் நிலை குறித்து தொடர்ந்து முழு வீச்சில் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications