அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து.. பைலட்டுகளின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
அருணாசல பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இடா நகர்: அருணாசல பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 2 பைலட்டுகள் இருந்த நிலையில், அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. இருவரையும் தேடும் பணி நடைபெற்று வருவதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்திய ராணுவம் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தி வருகிறது. பாதுகாப்பு தொடர்பான ரோந்து பணிகளிலும் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டு வரும் நிலையில், அருணாசல பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

காலை 9.15 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த இந்த ஹெலிகாப்டரில் இரண்டு பைலட்டுகள் இருந்துள்ளனர். இதனால் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த பைலைட்டுகளின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. இருவரையும் தேடும் பணி நடைபெற்று வருவதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. அருணாசல பிரதேசம் மிகவும் மலைப்பாங்கான பகுதி என்பதால் சாலை மார்க்கமாக செல்ல அதிக நேரம் ஆகும் என்பதால் அருணாசல பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
எல்லைப் பகுதி மாநிலமான அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திராங் பகுதியில் இருந்து தவாங் செல்லும் பகுதியில் தான் பொம்திலா என்ற இடம் உள்ளது. மலைப்பகுதிகளை கொண்ட இந்த இடத்தில்தான் விபத்து நடைபெற்றதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. விபத்துக்கான காரணம் மற்றும் விமானிகளின் நிலை குறித்து தொடர்ந்து முழு வீச்சில் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications