உ.பி.: பெண்ணை கிண்டல் செய்த வாலிபர்களை தட்டிக் கேட்ட ராணுவ வீரர் அடித்துக் கொலை
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண்ணை கிண்டல் செய்ததை எதிர்த்து கேட்ட ராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேத்மித்ரா சவுத்ரி. மீரட்டில் உள்ள ராணுவத்தின் என்ஜினியர் பிரிகேடில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். மீரட்டில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகரில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
அவர் தினமும் மாலை வேளையில் கிரிஷண் பால் என்பவரின் பண்ணைக்கு சென்று பால் வாங்குவது வழக்கம். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலையும் அந்த பண்ணைக்கு சென்றுள்ளார். அப்போது பாலின் மகள் வரிசையில் நின்ற வேத்மித்ராவுக்கு டீ கொடுத்துள்ளார். 4 வாலிபர்கள் அந்த பெண்ணை கிண்டல் செய்துள்ளனர்.
இதையடுத்து பாலின் மகனும், வேத்மித்ராவும் அந்த வாலிபர்களை கண்டித்துள்ளனர். அப்போது அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. வேத்மித்ரா வாலிபர்களை அங்கிருந்து விரட்டியடித்துள்ளார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு செல்லும் வழியில் அந்த வாலிபர்கள் பலரை அழைத்து வந்து அவரை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். அவர் மயங்கி விழுந்ததும் அவரது தலையில் கம்பியால் தாக்கிவிட்டு ஓடியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆகாஷ், சதீஷ் மற்றும் சதிந்திரா ஆகியோரை கைது செய்துள்ளனர். மீதமுள்ளவர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே வேதமித்ராவின் உடல் கடந்த வெள்ளிக்கிழமை ராணுவ மரியாதையுடன் ஷாம்லியில் அடக்கம் செய்யப்பட்டது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications