India wants to know... "டைம்ஸ் நவ்"வை விட்டு விலகினார் அர்னாப் கோஸ்வாமி #arnabgoswami
டைம்ஸ் நவ் டிவியின் தலைமை எடிட்டர் பதவியிலிருந்து விலகியுள்ளார் அர்னாப் கோஸ்வாமி.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரபல பத்திரிகையாளரும், டைம்ஸ் நவ் டிவியின் தலைமை எடிட்டருமான அர்னாப் கோஸ்வாமி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து நியூஸ் மினிட் வெளியிட்டுள்ள செய்தியில், டைம்ஸ் நவ் டிவியிலிருந்து விலகியுள்ள அர்னாப் தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் என்டிடிவியில் பிரன்னாய் ராயுடன் இணைந்து செயல்பட்டவர் அர்னாப். பின்னர் அங்கிருந்து விலகி டைம்ஸ் நவ் பொறுப்பை ஏற்றார். டைம்ஸ் நவ் டிவியில் அவர் இருந்த காலத்தில் பல பரபரப்புகளிலும், சர்ச்சைகளிலும் சிக்கினார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications