நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமான நிலையில் விட்டுச் சென்றுள்ளது காங்கிரஸ்- ஜேட்லி
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமான நிலையில் விட்டுச் சென்றுள்ளது. இதனால் ஏழ்மை அதிகரித்துவிட்டது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தில் பேசிய அருண் ஜெட்லி, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார கொள்கைகளால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்துவிட்டது.

நாட்டுக்குக் கிடைத்த பல நல்ல வாய்ப்புக்களை காங்கிரஸ் அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை. உலகளவில் மிகக் குறைவான விலையில் உற்பத்தி செய்யும் கேந்திரமாக இந்தியாவை உருவாக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதை காங்கிரஸ் அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை. இனியும் அது போன்ற வாய்ப்புகளை நாம் இழக்க முடியாது.
காங்கிரஸ் அரசு விட்டுச் சென்ற பொருளாதாரத்தை சீர்திருத்துவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி குறைவால் வரி வசூல் கூட பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதலீடுகளைப் பெருக்க வர்த்தகம் செய்வதற்கான செலவுகளை குறைப்பது அவசியம். புதிய அரசிடம், அரசியல் ரீதியிலான எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளன.
நாடு முழுவதிலும் ஒரே சீரான சரக்கு, சேவை வரியை அமல்படுத்த மத்திய அரசுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விற்பனை வரிக்குப் பதிலாக, சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில், மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
இதேபோல் விலைவாசி அதிகரிப்புக்கு காரணமாக விளங்கும் காரணிகளான பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தையில் பொருள்கள் விற்பனை ஆகியவற்றை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிலும் மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
நிபுணர்களுடன் ஆலோசனை
இந்நிலையில், மத்திய பட்ஜெட் தயாரிப்பது குறித்து, பொருளாதார நிபுணர்களுடன் அருண் ஜேட்லி ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார நிபுணர்கள், வரிவிதிப்பு சதவீதத்தை குறைத்தல், செஸ் வரியை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்ததாக தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications