இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாசலப் பிரதேசம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

அருணாசலப் பிரதேச சட்டசபையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
அருணாசலப் பிரதேசத்தை இந்தியாவிலிருந்து ஒருபோதும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தியாவின் பிற பகுதிகளுக்கும், அருணாசலப் பிரதேசத்துக்குமான சாலை வசதி உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் விரைந்து முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கு இங்குள்ள மக்களும், சட்டசபை உறுப்பினர்களும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள அண்டை நாடுகளுடன் இந்தியா வரலாற்று ரீதியாக நல்லுறவு கொண்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, அருணாச்சலப் பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்கள் பாலமாக விளங்குகின்றன.
இந்த மாநிலத்தில் நீர் மின் திட்டங்களை நிறைவேற்றுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அவ்வாறு முடித்து விட்டால், இந்தியாவிலேயே மிகவும் பணக்கார மாநிலமாக அருணாச்சலப் பிரதேசம் திகழும்.
அருணாச்சலப் பிரதேசம் மூன்று நாடுகளுடன் பொதுவான எல்லையைக் கொண்டிருப்பதால், இங்கு வளர்ச்சியை மேம்படுத்துவது மிகவும் முக்கியமாகும் என்றார்.
இதனிடையே அருணாசலப் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சிக்கலான எல்லை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பாதது திருப்தி அளிக்கிறது என்று சீனா கூறியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி, சீனாவுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கான முயற்சிகளில், பாதி தொலைவை இந்தியா பாதுகாப்பாக கடந்துள்ளது என சீனா நம்புகிறது.
சிக்கலுக்குரிய எல்லை தொடர்பான கேள்விகளை தவிர்த்து, அமைதியை நிலைநாட்டுவதற்கு சீனாவுடன் இணைந்து இந்தியா பணியாற்ற வேண்டும் என்றார்.
எல்லைப் பகுதியில் அமைதி நிலவவும், எல்லை தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான முகாந்திரத்தை ஏற்படுத்தவும் இந்தியா முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங், அருணாசலப் பிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டபோது எரிச்சலடைந்த சீனா, தற்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பயணத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications