தேசிய விருதை திருப்பி ஒப்படைத்தார் அருந்ததிராய்... இந்துத்துவாவாதிகள் மீது கடும் பாய்ச்சல்!
டெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மைக்கு எதிராக தமது தேசிய விருதை எழுத்தாளர் அருந்ததிராய் திருப்பி ஒப்படைத்துள்ளார். சகிப்பின்மை என்ற பெயரில் படுகொலைகள் நிகழ்த்தப்படுவதாக அருந்ததிராய் கடுமையாக சாடியுள்ளார்.
மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக படுகொலை, எதிர்கருத்துகளை பேசியதற்காக படுகொலை என அண்மைக்காலமாக சகிப்பின்மையால் கொலைகள் அதிகரித்து வருகின்றன.

நாட்டில் அதிகரித்து வரும் இந்த சகிப்பின்மைக்கு எதிராக எழுத்தாளர்கள், படைப்பாளிகள், விஞ்ஞானிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை திரும்ப ஒப்படைத்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விருது ஒப்படைப்புக்கு நிகழ்வுக்கு எதிராகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் In Which Annie Gives it Those Ones என்ற திரைப்படத்துக்காக தமக்கு வழங்கப்பட்ட சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதை புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய் திருப்பி கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்தியாவில் தலித்துகள், பழங்குடி மக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் தீவிரவாதம் சூழ்ந்த ஒரு நிலையில் தங்களுக்கு எப்போது என்ன நடக்கும், யார் நம்மை என்ன செய்வார்களோ என்ற அச்சத்தில் வாழ்கின்றனர்.
வளர்ச்சி அடைந்துவிட்டதாக சொல்லப்படுகிற இந்த தேசத்தில் தலித்துகள் கழுத்தறுக்கப்படும் எரித்துக் கொல்லப்படுவதும் தொடர்கிறது. விருதுகளை திருப்பி ஒப்படைக்கிற இந்த அரசியல் போராட்டத்தில் என்னையும் இணைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications