வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்கு: கெஜ்ரிவால் தாக்கு
டெல்லி: டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள 4 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு தான் வாக்குப் பதிவாகிறது என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. டெல்லி பெண்களின் ஆதரவு கெஜ்ரிவாலுக்கு உள்ளது. பலர் கெஜ்ரிவால் தான் டெல்லி முதல்வராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகளும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கெஜ்ரிவால் டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சோதனையிட்டார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறுயிருப்பதாவது,
பெரிய அளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர மோசடி? ஆமாம். டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் சோதனை நடத்தியபோது 4 எந்திரங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்குகள் பதிவாகிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications