ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க மோடி தயாரா?: அரவிந்த் கேஜ்ரிவால் பகிரங்க சவால்
டெல்லி: மோடியுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் இடத்தை அவரே தேர்வு செய்யட்டும் என்று ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்தத்தில் அவர் இன்று கூறியுள்ளதாவது:
கங்கா ஆரத்தி எடுக்க மோடிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆரத்தி எடுப்பதற்கு பதிலாக அவர் தனது அரசியல் செல்வாக்கை அதிகரிக்க இந்த பூஜையை பயன்படுத்திக்கொள்வார்.
பாஜகவின் மூத்த தலைவர்கள் காசியில் குவிந்துகொண்டுள்ளார்கள். அவர்களால் மோடியை தோவ்லியில் இருந்து காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை.
நான் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாராக உள்ளேன். எங்கள் இருவரிடமும் வாரணாசி மக்கள் நேரடியாக கேள்விகளை கேட்கட்டும். எந்த இடத்தில் விவாதம் நடத்தலாம் என்பதை மோடியே தீர்மானிக்கட்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஆரத்தி எடுக்க அனுமதி கிடைத்த பிறகும் மோடி அதை அரசியலாக்குவதாகவும் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications