கெஜ்ரிவாலை குண்டு வைத்து கொலை செய்வோம்: மிரட்டல் போன் அழைப்பால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை குண்டு வைத்து கொலை செய்யப்போவதாக செல்போன் மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து அவரின் அலுவலகம் மற்றும் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. எடுத்துப் பேசியபோது மறுமுனையில் பேசியவர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை வெடிகுண்டு வைத்து கொலை செய்வோம் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

Arvind Kejriwal's security beefed up after a threat call to blow him up

இதையடுத்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் கெஜ்ரிவாலின் அலுவலகம் மற்றும் வீட்டில் குண்டு ஏதாவது உள்ளதா என்று சோதனை நடத்தினர். சோதனையில் குண்டு எதுவும் சிக்கவில்லை.

இருப்பினும் கெஜ்ரிவாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த போன் அழைப்பு எங்கிருந்து வந்தது, யார் மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கையில் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+