Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வந்தே பாரத்தோட அடையாளமே இதுதானே.. ஆனா, இன்னைக்கு பிரதமர் தொடங்கி வச்ச ரயிலோட வேகத்த பாருங்களேன்

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் இந்த ரயிலின் வேகம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இந்நிலையில் ரயில் சேவையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல சமீபத்தில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

 As Prime Minister Modi launched Uttarakhands Vande Bharat train service, its speed has come under criticism

இந்த ரயில் முக்கிய நகரங்களை இணைக்கும். அதேபோல அதிவேகம் மற்றும் நவீன வசதிகளை கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் இந்த ரயில் சேவைக்கு பெரும் வரவேற்பு இருந்தது. முதன் முதலாக டெல்லியிலிருந்து 759 கி.மீ தொலைவில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு இயக்கப்பட்டது. மொத்தம் 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் இருக்கை வசதி மட்டுமே இருக்கும். எடை குறைவான இந்த ரயில் கவாச் ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ரயில் இயக்கப்பட்டதால் அதேபோல மிகுந்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. அதிகபட்சமாக 180 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரயில் சில குறிப்பிட்ட நிறுத்தத்தில் மட்டுமே நின்று செல்லும். இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்.

ஏற்கெனவே மாநிலம் முழுவதும் உள்ள ரயில் வழித்தடங்கள் அனைத்தும் முழுவதுமான மின் மயமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய வந்தே பாரத் ரயில் அம்மாநில ரயில் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இந்த ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். காணொலி வாயிலாக அவர் தொடங்கி வைக்கும் இரண்டாவது ரயில் சேவை இதுவாகும்.

முன்னதாக கடந்த 18ம் தேதி ஒடிசாவின், பூரியிலிருந்து மேற்கு வங்கத்தின் கொல்கத்தா வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி வாயிலாக அவர் தொடங்கி வைத்திருந்தார். இதனையடுத்து இன்று இரண்டாவது முறையாக காணொலி வாயிலாக இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் பகுதியிலிருந்து டெல்லி வரை பயணிக்கிறது. செமி-ஸ்பீடு வரிசையில் இயக்கப்படும் 6வது வந்தே பாரத் ரயில் இதுவாகும்.

 As Prime Minister Modi launched Uttarakhands Vande Bharat train service, its speed has come under criticism

டேராடூனுக்கும், டெல்லிக்கும் சுமார் 314 கி.மீ தொலைவு இருக்கிறது. இந்த வழித்தடத்தில் 7 ரயில்கள் இதுவரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் 413 கி.மீ தொலைவை கடக்க சுமார் 5 மணி நேரம் 45 நிமிடங்கள் தொடங்கி, 9 மணி நேரம் 55 நிமிடங்கள் வரை ரயில்கள் எடுத்துக்கொள்கின்றன. எனவே இந்த பயண நேரத்தை குறைக்க வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் 314 கி.மீ தொலைவை, வெறும் 4 மணி நேரம் 45 நிமிடங்களில் கடந்து விடும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

ஆனால் இதிலும் ஒரு சிக்கல் நிலவுகிறது. அதாவது மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பயணம் செய்யப்படும் என்று சொல்லப்பட்ட வந்தே பாரத் ரயில் இந்த பாதையில் வெறும் 64 கி.மீ வேகத்தில்தான் இயக்கப்படுகிறது. இது குறித்து அரசியல் விமர்சகரான சுமந்த் ராமன் கலாய்த்து ட்வீட் செய்துள்ளார். அதாவது, இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் 8 ரேக் கோச்களை கொண்ட வந்தே பாரத் ரயிலாகும். நாளொன்றுக்கு இரண்டு ரயில்கள் இயக்கப்படுகிறது. ஒரு ரயில் 64 கி.மீ வேகம் எனில் இரண்டு ரயில்களின் வேகம் 128 கி.மீதானே? என்று கலாய்த்து ட்வீட் செய்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+