For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'சோட்டா' ஆதரவாளர்களைப் போட்டுத் தள்ள தாவூத் திட்டம்... மும்பையில் மோதல் வெடிக்கலாம் என எச்சரிக்கை

Google Oneindia Tamil News

மும்பை: சோட்டா ராஜனை சிபிஐ குழுவினர் இந்தியா அழைத்து வரும் நாளில், மும்பையி்ல் தாவூத் இப்ராகிம் கும்பலுக்கும், சோட்டா ராஜன் கும்பலுக்கும் இடையே பெரும் மோதல் வெடிக்கலாம் என ஐபி எச்சரித்துள்ளது. சோட்டா ராஜன் கும்பலைச் சேர்ந்த முக்கியப் புள்ளியை போட்டுத் தள்ள தாவூத் கும்பல் திட்டமிட்டிருப்பதாகவும், அதேபோல தாவூத் கும்பலைச் சேர்ந்தவர்களை சோட்டா ராஜன் கும்பல் போட்டுத் தள்ளக் கூடும் என்றும் ஐபி தனது எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மும்பை முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவு மோதல் வெடிக்கக் கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

சோட்டா ராஜன் மீதான கோபத்தைக் காட்ட அவரது ஆதரவாளர்களில் ஒருவரை போட்டுத் தள்ள தாவூத் கும்பல் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

போட்டா போட்டி

போட்டா போட்டி

தாவூத் இப்ராகிமும், சோட்டா ராஜனும் ஒரு காலத்தில் இணைந்து செயல்பட்டவர்கள். ஆனால் பின்னர் விரோதிகள் ஆகினர். அதன் பின்னர் ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ள துடித்து வருகின்றனர். ஆனால் யாருக்குமே இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.

இந்தோனேசியாவில் சிக்கிய சோட்டா

இந்தோனேசியாவில் சிக்கிய சோட்டா

தாவூத்தின் பல முயற்சிகளிலிருந்து சோட்டா ராஜன் தப்பி விட்டார். அதேசமயம், சோட்டா ராஜனால் தாவூத்தை நெருங்கக் கூட முடியவில்லை. இந்த நிலையில் தற்போது இந்தோனேசியாவில் போலீஸிடம் சிக்கி விட்டார் சோட்டா ராஜன். அவரை சிபிஐ இந்தியாவுக்குக் கொண்டு வரவுள்ளது.

போட்டுத் தள்ளுவோம்

போட்டுத் தள்ளுவோம்

இந்த நிலையில் சோட்டா ராஜன் மீதுள்ள கோபத்தைக் காட்ட அவரை இந்தியாவுக்குக் கொண்டு வரும் சமயத்தில் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்த தாவூத் கும்பல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மும்பையில் பதட்டம் நிலவுகிறது.

சந்தேகம்

சந்தேகம்

மேலும் சோட்டா ராஜனையும் போட்டுத் தள்ள பல்வேறு வழிகளில் தாவூத் கும்பல் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் கூறப்படுவதால் சோட்டா ராஜன் மும்பைக்கு நேரடியாக அழைத்து வரப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று இரவு வருகிறார்

இன்று இரவு வருகிறார்

இன்று இரவு அனேகமாக சோட்டா ராஜன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் முதலில் டெல்லி கொண்டு வரப்படுவார் என்றும் பின்னரே மும்பை கொண்டு வரப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இதில் தெளிவான தகவல் இல்லை.

English summary
Ahead of Chhota Rajan’s return to India which is likely to take place tonight, there is tight security in Mumbai where an intelligence bureau alert states that a gang war may trigger off. The alert states that the Dawood Ibrahim gang may look to carry out an attack on a Rajan syndicate member. It could be vice versa too, the IB alert states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X