பலாத்கார வழக்கு: அஸரம் பாபுவுக்கு ஜாமீன் மறுப்பு!
Subscribe to Oneindia Tamil

கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சாமியார் அஸரம் பாபுவின் அகமதாபாத் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, அவர் தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக சூரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் அஸரம் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அஸரம் பாபு தமக்கு ஜாமீன் கோரி காந்திநகர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திர்நுதார். இம்மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அஸரம் பாபுவின் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்ததுடன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications