பலாத்கார சாமியார் அஸராம் பாபுவின் மகன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர், அஸராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். ஏற்கெனவே அஸராம் பாபு ராஜஸ்தான் மாநில பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதனால் சிறையில் இருந்த அஸராம் பாபுவை சூரத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அஸராம் பாபுவின் மகன் நாராயண் சாய் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. இதனால் கடந்த அக்டோபர் மாதம் 7ந் தேதியன்று, அவருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியது.
ஆனால், அதன்பிறகும் அவரை போலீசார் கைது செய்ய முடியவில்லை. இதனால் அவர் தேடப்படும் குற்றவாளியாக தற்போது குஜராத் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications