ஆசியான் மாநாட்டின் நோக்கம் நிறைவேறி இருக்கிறது.. பிரதமர் மோடி பேச்சு
ஆசியான் உச்சிமாநாட்டின் நோக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
டெல்லி: ஆசியான் உச்சிமாநாட்டின் நோக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார். டெல்லியில் நடக்கும் மாநாட்டில் அவர் பலநாட்டு தலைவர்கள் முன்னிலையில் பேசியுள்ளார்.
டெல்லியில் இன்றும் நாளையும் ஆசியான் மாநாடு நடக்கிறது. இன்றைய ஆசியான் உச்சிமாநாட்டில் ஆசிய நாட்டு தலைவர்களுடன் பிரதமர் பேச்சு நடத்தினார்.

இந்த மாநாட்டில் இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம்,சிங்கப்பூர், மியான்மர், லாவோஸ், பிலிப்பைன்ஸ், கம்போடியா, மற்றும் புருனே ஆகிய பத்து நாட்டு தலைவர்கள் பங்கேற்று இருக்கிறார்கள்.
இதில் பேசிய மோடி ''ஆசியான் உச்சிமாநாட்டின் நோக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா-ஆசியான் நாடுகள் இடையேயான உறவு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது'' என்றார்.
மேலும் ''கடல் போக்குவரத்தில் ஆசியான் நாடுகளுக்கிடையே கூட்டுமுயற்சியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. கடல் போக்குவரத்தில் ஆசியான் நாடுகளுக்கிடையே ஒற்றுமை ஏற்படும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நாளையும் இந்த மாநாடு நடக்கும். நாளை குடியரசு தினம் என்பதால் நிறைய விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.












Click it and Unblock the Notifications