சோனியா விசுவாசி.. 46 ஆண்டுகள் பயணித்த காங்கிரஸிலிருந்து விலகினார் அஸ்வனி குமார்.. பரபரப்பில் பஞ்சாப்
அமிருதசரஸ்: முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில மூத்த தலைவருமான அஸ்வனி குமார் அக்கட்சியிலிருந்து விலகினார். இவர் 45 ஆண்டுகள் கழித்து காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார்.
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மத்திய சட்டத் துறை அமைச்சராக இருந்தவர் அஸ்வனி குமார். இவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நெருக்கமானவர் என கருதப்படுகிறது. முன்னாள் அமைச்சர் கபில் சிபலுக்கும் நெருக்கமானவர். அது போல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு விசுவாசமாக இருந்தார்.
பஞ்சாப் மாநில தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அஸ்வனி குமார் விலகல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்திக்கு அவர் எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, இந்த நாட்டு மக்களுக்கு சேவையாற்ற தொடர்ந்து அரசியலில் இருப்பேன் என முடிவு செய்துள்ளேன்.

உடல்நலம்
அதன்படி 46 ஆண்டுகால நீண்ட நெடிய பயணத்திற்கு பிறகு நான் கட்சியிலிருந்து விலகுகிறேன். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் கட்சியில் அடிப்படை மாற்றங்கள் செய்ய கோரி கடந்த 2020 ஆம் ஆண்டு குலாம் நபி ஆசாத், கபில் சிபல், சசி தரூர், முகுல் வாஸ்னிக், ரேணுகா சவுத்ரி, ராஜ் பப்பர் உள்ளிட்ட 23 தலைவர்கள் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

சோனியாவுக்கு ஆதரவு
அப்போது சோனியாவுக்கு ஆதரவாக இருந்தவர் அஸ்வனிகுமார். கட்சியில் உள்ள பிரச்சினைகள், முக்கிய விவகாரங்களை சோனியா காந்தி தலைமையில் மட்டுமே தீர்க்கப்பட முடியும் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது. வேறு கட்சியில் இணைய போகிறீர்களா என்ற கேள்விக்கு அஸ்வனிகுமார் கூறுகையில் எந்த அரசியல் கட்சியும் வேண்டாம் என கருதவில்லை என்றார்.

செயலாளர்
அஷ்வனிகுமார் 1976 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1990 ஆம் ஆண்டு சந்திரசேகர் அரசில் கூடுதல் சொலிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இவரது குடும்பமே அரசியல் குடும்பம். இவரது தந்தை பிரபோத் சந்திரா சுதந்திர போராட்ட வீரர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர், எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் பஞ்சாப் சட்டசபை சபாநாயகராகவும் இருந்தவர்.

அஸ்வனிகுமார்
2002 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்ட அஸ்வனிகுமார் அதே பதவியில் 2016 வரை இருந்தார். மத்தியில் காங்கிரஸ் இரு முறை தொடர்ந்து ஆட்சி செய்த போதும் இரு முறையும் அமைச்சராக இருந்தார். ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னாள் கோவா முதல்வர் லூசின்ஹோ ஃபலேரோ, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகிய இருவர் விலகிவிட்டனர்.

விலகல்
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மூத்த தலைவர் விலகியிருப்பது தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக இருக்கும் என சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாதா, ஆர்பிஎன் சிங், சுஷ்மிதா சேவ், பிரியங்கா சதுர்வேதி, லலிதேஷ்பதி திரிபாதி உள்ளிட்ட இளைஞர்களும் கடந்த 2 ஆண்டுகளில் காங்கிரஸில் இருந்து விலகிவிட்டனர்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications