இன்றுடன் முடியும் ‛கெடு’.. ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை விரைவு நீதிமன்றத்தில் தாக்கல்? பரபர தகவல்
வாரணாசி: ஞானபாவி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான அறிக்கையின் நகலை இந்திய தொல்லியல் துறை சமர்ப்பிக்க விரைவு நீதிமன்றம் வழங்கிய காலஅவகாசம் இன்றுடன் முடிவுக்கு வர உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இதனருகே காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்நிலையில் தான் மசூதி பகுதியில் பழமையான இந்து கோவில் சிங்கார கவுரி உள்ளதாக, இந்த கோவிலை வழிபட அனுமதி கோரியும் பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணை நடத்திய நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ளவும், ஆய்வை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டது. இதையடுத்து சர்ச்சைகள் கிளம்பின. முஸ்லிம்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் நீதிமன்றம் உத்தரவிட்டதால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
இருப்பினும் சட்ட ரீதியான போராட்டத்தை கையில் எடுத்தனர். அதாவது இஸ்லாமியர்கள் தரப்பில் ஆய்வுக்கு தடைக்கோரி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்றனர். ஆனால் 2 நீதிமன்றங்களும் ஆய்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து இந்திய தொல்லியல் துறை கடந்த ஆகஸ்ட்மாதம் ஆய்வை தொடங்கியது.
இந்த ஆய்வு தொடர்ந்து வந்த நிலையில் வாரணாசி நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின் தகவல் ரகசியமாக உள்ளது. மேலும் 4 வாரங்கள் வரை இந்த ஆய்வறிக்கை தகவலை வெளியிட வேண்டாம். வெளியிட்டால் பிரச்சனை ஏற்படலாம் என இந்திய தொல்லியல் துறை சார்பில் கூறப்பட்டது.
இதற்கிடையே தான் ஞானவாபி வளாகத்தில் இருப்பதாக கூறப்படும் கோவிலை புனரமைக்க அனுமதி கோரி வாரணாசி விரைவு நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான் அந்த வழக்கில் ஆய்வறிக்கையின் நகலை ஜனவரி 19ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த காலக்கெடு என்பது இன்றுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் தான் மீண்டும் விரைவு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. ஆய்வறிக்கையின் மீது விசாரணை தொடங்க உள்ளதால் மீண்டும் ஞானபாவி வழக்கு சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications