இன்றுடன் முடியும் ‛கெடு’.. ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை விரைவு நீதிமன்றத்தில் தாக்கல்? பரபர தகவல்
வாரணாசி: ஞானபாவி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான அறிக்கையின் நகலை இந்திய தொல்லியல் துறை சமர்ப்பிக்க விரைவு நீதிமன்றம் வழங்கிய காலஅவகாசம் இன்றுடன் முடிவுக்கு வர உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இதனருகே காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்நிலையில் தான் மசூதி பகுதியில் பழமையான இந்து கோவில் சிங்கார கவுரி உள்ளதாக, இந்த கோவிலை வழிபட அனுமதி கோரியும் பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணை நடத்திய நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ளவும், ஆய்வை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டது. இதையடுத்து சர்ச்சைகள் கிளம்பின. முஸ்லிம்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் நீதிமன்றம் உத்தரவிட்டதால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
இருப்பினும் சட்ட ரீதியான போராட்டத்தை கையில் எடுத்தனர். அதாவது இஸ்லாமியர்கள் தரப்பில் ஆய்வுக்கு தடைக்கோரி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்றனர். ஆனால் 2 நீதிமன்றங்களும் ஆய்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து இந்திய தொல்லியல் துறை கடந்த ஆகஸ்ட்மாதம் ஆய்வை தொடங்கியது.
இந்த ஆய்வு தொடர்ந்து வந்த நிலையில் வாரணாசி நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின் தகவல் ரகசியமாக உள்ளது. மேலும் 4 வாரங்கள் வரை இந்த ஆய்வறிக்கை தகவலை வெளியிட வேண்டாம். வெளியிட்டால் பிரச்சனை ஏற்படலாம் என இந்திய தொல்லியல் துறை சார்பில் கூறப்பட்டது.
இதற்கிடையே தான் ஞானவாபி வளாகத்தில் இருப்பதாக கூறப்படும் கோவிலை புனரமைக்க அனுமதி கோரி வாரணாசி விரைவு நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான் அந்த வழக்கில் ஆய்வறிக்கையின் நகலை ஜனவரி 19ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த காலக்கெடு என்பது இன்றுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் தான் மீண்டும் விரைவு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. ஆய்வறிக்கையின் மீது விசாரணை தொடங்க உள்ளதால் மீண்டும் ஞானபாவி வழக்கு சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications