மே 4 ஜட்ஜ்மெண்ட் டே-க்கு ரெடியாகும் அசாம்.. 8500 பேர் களத்தில் இறக்க கோயல் திட்டம்!

Subscribe to Oneindia Tamil

அசாம் சட்டமன்றத் தேர்தல் 2026-இன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகிவிட்டதாக முதன்மை தேர்தல் அதிகாரி அனுராக் கோயல் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 9 அன்று நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, 126 தொகுதிகளுக்கான வாக்குகளை எண்ணும் பணி மிகவும் சீராகவும் வெளிப்படையாகவும் நடைபெறும் வகையில் தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

Assam Vote Counting 2026 May 4 Assam Results Anurag Goyal Press Conference Assam Election Counting Centres Record Voter Turnout Assam 2026 4 Assam Assembly Election 2026 counting May 4 vote counting Assam Anurag Goyal Assam 8500 officials Assam counting 40 counting centres Assam Assam election results May 4 EVM strong room security Assam 25 CRPF Assam election highest voter turnout Assam 2026 Barpeta Dhubri polling percentage Assam polling April 9 Kokrajhar Tinsukia counting centres Nagaon counting centre transparent election counting Assam Assam Legislative Assembly results 2026 2026 4 8500 40 4 25 2026 9 2026

மே 4 அன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் சுமார் 8,500 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 35 மாவட்டங்களில் 40 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான மாவட்டங்களில் ஒரே மையம் அந்த மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை பணியின் பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், கொக்ராஜார், தின்சுக்கியா மற்றும் ஜோர்ஹாட் ஆகிய மூன்று மாவட்டங்களில் தலா இரண்டு மையங்களும், நகாவோன் மாவட்டத்தில் மூன்று மையங்களும் செயல்படும் என அனுராக் கோயல் தெரிவித்தார்.

இந்தத் தேர்தலில் அசாம் மாநிலம் கடந்த ஐந்து சட்டமன்றத் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் அதிகப்படியான வாக்காளர் பங்கேற்பைப் பதிவு செய்துள்ளது. பார்பேட்டா, துப்ரி, கோல்பாரா, போங்கைகான் மற்றும் சவுத் சல்மாரா ஆகிய மாவட்டங்களில் அதிக வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) அனைத்தும் ஸ்ட்ராங்க் ரூம்-ல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகள் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பில் உள்ளன. பாதுகாப்பை உறுதி செய்ய 25 சிஆர்பிஎஃப் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், அனைத்து வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் இந்த இடங்களில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஏற்பாடுகள் மூலம் வாக்கு எண்ணிக்கை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அனுராக் கோயல், "தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையை சுமூகமாகவும், வெளிப்படையாகவும் நடத்த முழுமையாக தயாராக உள்ளது" என்று தெரிவித்தார். அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அசாம் சட்டமன்ற தேர்தலில் மொத்த 126 இடங்களிஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 64 இடங்கள் தேவை. ஆனால், எக்ஸிட் போல் முடிவுகளின்படி என்டிஏ 85 முதல் 101 இடங்கள் வரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பிஜேபி தலைமையிலான என்டிஏ கூட்டணி 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்கப்போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+