Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2வது திருமணம் செய்தால் 10 ஆண்டு சிறை.. அசாமில் நிறைவேறிய சட்டம்.. சிறப்பம்சங்கள் இதுதான்

Subscribe to Oneindia Tamil

கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் முதல் மனைவி, கணவன் இருக்கும்போது அவருக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்தால் குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனை + அபராதம் விதிக்கும் மசோதா சட்டசபையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் சிறப்பம்சம் பற்றிய விவரம் வருமாறு:

அசாமில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஹிமாந்த பிஸ்வா சர்மா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் குளிர்கால சட்டசபை தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டததொடரில் ‛தி அசாம் பலதார திருமண மசோதா 2025' ( "The Assam Prohibition of Polygamy Bill, 2025,") கொண்டு வரப்பட்டது.

assam polygamy himanta biswa sarma

இந்த மசோதாவை முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன்பிறகு இந்த மசோதா எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நிறைவேறியது. இந்த மசோதா பலதார திருமணத்தை தடை செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டது. விரைவில் சட்டமாக நடைமுறைக்கு வர உள்ளது.

இந்த மசோதாவின்படி ஒருவர் தனது கணவன், மனைவி இருக்கும்போது 2 வது திருமணம் செய்ய முடியாது. முதல் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும்போது 2வது திருமணம் செய்தால் இந்த மசோதாவின்படி நடவடிக்கை பாயும்.

அதாவது விவாகரத்து பெறாமல் இன்னொருவரை திருமணம் செய்தால் இந்த சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி குறைந்தபட்சம் 7 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதுமட்டுமின்றி அதிகப்படியான தொகை அபராதமாக விதிக்கப்படும்.

இந்த மசோதா அசாமில் உள்ள அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். இருப்பினும் இந்த மசோதா என்பது அரசியலமைப்பு 6வது அட்டவணை பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா கூறியதாவது: ‛‛இந்த சட்ட மசோதா எந்த மதத்தினருக்கும் எதிரானது இல்லை. இஸ்லாம் மதம் பலதார மணத்தை அனுமதிப்பது இல்லை. இந்த சட்டத்தின் மூலமாக அவர்கள் உண்மையான இஸ்லாமியர்களாக மாறலாம். இந்த மசோதா இஸ்லாமுக்கு எதிரானது இல்லை. இதனால் உண்மையான இஸ்லாமியர்கள் இந்த மசோதாவை வரவேற்பார்கள்.

இஸ்லாமிய நாடான துருக்கி பலதார திருமணத்தை தடை செய்துள்ளது. அதேபோல் பாகிஸ்தானை எடுத்து கொண்டால் தனியாக நடுவர் மன்றமே உள்ளது. நான் மீண்டும் அசாம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டால் யூசிசி (UCC) எனும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை(Uniform Civil Code) கொண்டு வருவேன். முதல் சட்டசபை கூட்டத்தொடரிலேயே அதனை செய்து காட்டுவேன்'' என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+