பனியனுடன் அலறி ரூமுக்குள் ஓடிய டாக்டர்.. ஆஸ்பத்திரிக்குள் புகுந்து சரமாரி தாக்குதல்.. வைரல் வீடியோ
அசாம் டாக்டர் மீது சரமாரி தாக்குதல் நடத்தியவர்கள் கைதானார்கள்
புவனேஸ்வர்: கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் திடீரென இறந்துவிட்டார்.. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், அவருக்கு ட்ரிட்மென்ட் தந்த டாக்டரை கொடூரமாக தாக்கிவிட்டனர்.. இப்போது டாக்டர் ஐசியூவில் உள்ளார்..!
Recommended Video
அஸாமில் ஹோஜாய் என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார்..
தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
டாக்டர்கள் தீவிரமான சிகிச்சை தந்தும், பலனின்றி அந்த நோயாளி இறந்துவிட்டார்.. இதனால், ஆவேசமடைந்த அவரது குடும்பத்தினர், அந்த மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.
ஆஸ்பத்திரி
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், பதறி அடித்து கொண்டு ஆஸ்பத்திரியை விட்டு வெளியே ஓடிவந்தனர்.. மற்றவர்கள் எல்லாம் வெளியே தெறித்து ஓடினாலும் அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர் மட்டும் தன்னுடைய ரூமுக்குள் ஓடிப்போய் கதவை மூடிக் கொண்டார்.. அவர் பெயர் சேனாபதி. இதை பார்த்த அந்த கும்பல், டாக்டர் ரூமிமன் கதவை அடித்து நொறுக்கியது.. டாக்டரையும் ஆத்திரத்தில் கடுமையாக தாக்கியது..
வைரல் வீடியோ
இதில் டாக்டர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.. பலத்த காயங்களுடன், பக்கத்தில் இருக்கும் இன்னொரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடந்துவருகிறது. டாக்டரை சரமாரியாக தாக்கிய வீடியோ, தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. இன்றைய பெருந்தொற்று காலத்தில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் நோயாளிகளுக்கு பல்வேறு டாக்டர்களும், நர்ஸ்களும், சிகிச்சை தந்து வருகிறார்கள்..
பாதிப்பு
ஆனால், அதை பற்றி எதுவுமே யோசிக்காமல், தொற்று பாதித்து இறந்தார் என்பதற்காக, சிகிச்சை தந்த டாக்டரையே அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. டாக்டரின் சட்டையை கிழித்து பனியனுடன் ஓடவிட்டு அடித்துள்ளனர்.. இதற்கு பலரும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து 24 பேரை கைது செய்துள்ளனர்.
போராட்டம்
சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாருக்கு மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தற்கு கண்டனம் தெரிவித்து, அசாம் மருத்துவ சேவை சங்கம் புறநகர் சிகிச்சை பிரிவு சேவையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்... ஆனால் ஐசியூ, கொரோனா வார்டுகளில் உள்ள டாக்டர்கள் மட்டும் கருப்பு பேட்ஜ் அணிந்து அப்போதும் தங்கள் கடமையை செய்து கொண்டுதானிருந்தனர்..!