அசாமைப் புரட்டிப் போட்ட வெள்ளம்- 4 லட்சம் பேர் பாதிப்பு; உடைமைகளை இழந்து தவிப்பு!
Subscribe to Oneindia Tamil
கவுகாத்தி: அசாமில் மோசமடைந்து வருகின்ற வெள்ளத்தால் கிட்டதட்ட 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாமில் வெள்ள பாதிப்பு மிகவும் தீவிரமடைந்துள்ளது. வெள்ளத்தினால் ஏராளமான நகரங்களும், ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இது பற்றி அசாம் மாநில பேரிடர் நிவாரண ஆணையம் சார்பாக, "தேமாஜி, திப்ருகார், தின்சுகியா மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது.

சுமார் 700 கிராமங்கள் வெள்ளத்தினால் கடந்த இரண்டு நாட்களாக சூழப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4.64 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications